Friday 9 March 2012

அனுமன்




ஸர்வ  கல்யாண  தாதாரம் 
ஸர்வா பத்கந  வாரகம் 
கருணா  மூர்த்திம்
ஆஞ்சநேய  நமாம்யஹம்

அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அவருக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயலும் வெற்றியாகவே முடியும்.

இலங்கையிலிருந்து சீதையை வணங்கி அனுமன் விடை பெற்றுக் கொள்ளும்போது சீதை தன் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து ஓர் இலையைக் கிள்ளி அனுமன் தலையில் போட்டு வாழ்த்தியதால் அவருக்கு வெற்றிலை மாலை அணிவித்து நாம் அவரது ஆசியைப் பெறலாம்.

ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றினால் குழந்தை பாக்கியமும், துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும், வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும் கிட்டும் என்பது நம்பிக்கை.

குறிப்பாக சனிப் பெயர்ச்சி நடப்பவர்கள் அனுமனை வணங்கி வருவது பல சங்கடங்களைப் போக்கும்.




3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான அருமையான பதிவு. அனுமன் பற்றியது. மகிழ்ச்சி.

word verification ஐ தயவுசெய்து எடுத்து விடுங்கள், ஐயா.

இராஜராஜேஸ்வரி said...

அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அவருக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயலும் வெற்றியாகவே முடியும்.


சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..