Monday 5 March 2012





""ஞானானந்தம் மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் 
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!'' 


என்ற ஸ்லோகத்தை சொல்லிய பிறகு காலை, மாலை நேரத்தில் வீட்டில் படிக்கத் தொடங்கும் முன், சொல்லசெய்ய வேண்டும்.. கல்விக்குரிய புதன் கிழமையில் பெருமாள் கோயில்களில் ஹயக்ரீவர் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி வர நிச்சயம் பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படத் தொடங்கும். 



வீட்டில் நன்றாகப் படிக்கும் குழந்தைகள் தேர்வு அறைக்கு போனதும் பதட்டத்தில் படித்ததை மறந்து விடுவர்
சில குழந்தைகள் ஆர்வக்குறைவினால் படிப்பில் ஈடுபாடு இல்லாமலும், சிலர் மணிக் கணக்காய் படித்தாலும், பாடங்கள் புரியாமலும் சிரமப்படுவர். சிலர் விளையாட்டு புத்தியால் படிப்பில் கவனமில்லாமல் இருப்பர்.


இப்படி எந்த பிரச்னையாக இருந்தாலும், அதை நீக்கி, படிப்பில் முன்னேற்றத்தை அருள லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு உதவி செய்யும். குதிரை முகத்தோடு இருக்கும் இப்பெருமானை வழிபட்டே, சரஸ்வதியே அனைத்து வித்தைகளையும் கற்றதாக ஐதீகம்.... 




3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான படங்களுடன் அழகான விளக்கஙகள். நன்றி.

தயவுசெய்து word verification என்பதை எடுத்து விடுங்கள். பின்னூட்டமிடுபவர்களுக்கு அது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும்.

கோவை நேரம் said...

உங்க பிளாக் ல இருக்குற ஸ்லோகன் பார்த்துட்டு என் பொண்ணு பார்க்காமலே சொல்லிட்டா....அவ பள்ளி கூடத்துக்கு நன்றி ..
////தயவுசெய்து word verification என்பதை எடுத்து விடுங்கள். பின்னூட்டமிடுபவர்களுக்கு அது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும்.///
இதை நான் வழி மொழிகிறேன்

இராஜராஜேஸ்வரி said...

எந்த பிரச்னையாக இருந்தாலும், அதை நீக்கி, படிப்பில் முன்னேற்றத்தை அருள லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு உதவி செய்யும்.

பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள்..